Tamil Grammar MCQ Quiz - Objective Question with Answer for Tamil Grammar - Download Free PDF

Last updated on Jun 27, 2025

Latest Tamil Grammar MCQ Objective Questions

Tamil Grammar Question 1:

சேரமான் காதலி என்னும் புதினம் யாருடைய படைப்பு ?

  1. ஜெயகாந்தன்
  2. இராஜாஜி
  3. சோ.தருமன் 
  4. கண்ணதாசன்

Answer (Detailed Solution Below)

Option 4 : கண்ணதாசன்

Tamil Grammar Question 1 Detailed Solution

கண்ணதாசன்

Key Pointsகண்ணதாசன் சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி
விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

Tamil Grammar Question 2:

சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படைப்புக்காக சாகித்திய அகாதெமி விருது வென்றவர் ?

  1. வல்லிக்கண்ணன்
  2. சு.வெங்கடேசன் 
  3. ராஜம் கிருஷ்ணன் 
  4. ஜெயகாந்தன் 

Answer (Detailed Solution Below)

Option 4 : ஜெயகாந்தன் 

Tamil Grammar Question 2 Detailed Solution

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

Tamil Grammar Question 3:

கைதொழுது - இலக்கணக்குறிப்பறிக :

  1. பண்புத்தொகை
  2. வினைத் தொகை
  3. மூன்றாம் வேற்றுமைத் தொகை
  4. உரிச்சொல் தொடர்

Answer (Detailed Solution Below)

Option 3 : மூன்றாம் வேற்றுமைத் தொகை

Tamil Grammar Question 3 Detailed Solution

கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத் தொகை

Tamil Grammar Question 4:

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ?

  1. உவமையணி
  2. உருவக அணி
  3. சொல்லணி
  4. வஞ்சப்புகழ்ச்சியணி

Answer (Detailed Solution Below)

Option 1 : உவமையணி

Tamil Grammar Question 4 Detailed Solution

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
பொருள்: ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாகும்.
அணி: உவமையணி

Tamil Grammar Question 5:

தடக்கை- இலக்கணக்குறிப்பறிக :

  1. பண்புத்தொகை
  2. வினைத்தொகை
  3. மூன்றாம் வேற்றுமைத்தொகை
  4. உரிச்சொல் தொடர்

Answer (Detailed Solution Below)

Option 4 : உரிச்சொல் தொடர்

Tamil Grammar Question 5 Detailed Solution

தடக்கை - உரிச்சொல் தொடர்

Top Tamil Grammar MCQ Objective Questions

பொருந்தாத இணையினைக் கண்டறிக
திணை - தொழில்

  1. முல்லை - வரகு விதைத்தல், களை பறித்தல்
  2. பாலை - நிரை கவர்தல், சூரையாடல்
  3. குறிஞ்சி - தேனெடுத்தல், கிழங்கழ்தல்
  4. மருதம் - மீன்பிடித்தல், உப்பு விற்றல்

Answer (Detailed Solution Below)

Option 4 : மருதம் - மீன்பிடித்தல், உப்பு விற்றல்

Tamil Grammar Question 6 Detailed Solution

Download Solution PDF
சரியான பதில் மருதம் - மீன் பிடித்தல், உப்பு விற்றல்
Key Points
  • முல்லை: 
    • நிலம் = காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும்
    • தொழில் = சாமை, வரகு விதைத்தல், களை கட்டல், அரிதல்
    • உணவு = வரகு, சாமை, முதிரை
    • தெய்வம் = மாயோன்
    • பறவை = காட்டுக்கோழி
  • பாலை:
    • நிலம் = சுரமும் சுரம் சார்ந்த நிலமும் ஆகும்
    • தொழில் = போர் செய்தல், சூறையாடல்
    • உணவு = வழியில் பறித்த பொருள்
    • பறவை = புறா, பருந்து, கழுகு
    • தெய்வம் = கொற்றவை
  • குறிஞ்சி:
    • நிலம் = மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும்
    • தொழில் = வெறியாடல், மலைநெல் விதைத்தல், தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
    • உணவு = மலை நெல், தினை, மூங்கில் அரிசி
    • தெய்வம் = சேயோன்
    • பறவை = கிளி, மயில்
Additional Information
  • மருதம்:
    • நிலம் = வயலும் வயல் சார்ந்த நிலமும் ஆகும்
    • தொழில் = வயலில் களை கட்டல், நெல்லரிதல்
    • உணவு = செந்நெல், வெண்ணெல்
    • தெய்வம் = வேந்தன்
    • பறவை = நாரை, அன்னம், மகன்றில்

கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?

I. நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
II. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
III. வேற்றுமை உருபேற்கும் போது, ‘யான்’ என்பது ‘என்’ என்றும்  ‘யாம்’ என்பது ‘எம்’ என்றும், ‘நாம்’ என்பது ‘நம்’ என்றும் திரியும்
IV. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்.

  1. I,III, IV சரியானவை

  2. I,II, III சரியானவை
  3. II,IV, I சரியானவை
  4. IV,III, I சரியானவை

Answer (Detailed Solution Below)

Option 2 : I,II, III சரியானவை

Tamil Grammar Question 7 Detailed Solution

Download Solution PDF
சரியான பதில்: I, II, III சரியானவை
Key Points
  • நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள். 
  • நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்.
  • வேற்றுமை உருபேற்கும் போது, யான் என்பது என் என்றும், யாம் என்பது எம் என்றும், நாம் என்பது நம் என்றும் திரியும்.
Additional Information
  • நீ என்பது முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்.
  • நீர், நீவிர், நீங்கள் என்பன முன்னிலை பன்மை பெயர் ஆகும்

‘இன்மையுள் இன்மை விருந்தொரால்’ - இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக

  1. பண்புப்பெயர்
  2. வினையாலணையும் பெயர்
  3. பண்பாகு பெயர்
  4. வியங்கோள் வினைமுற்று

Answer (Detailed Solution Below)

Option 3 : பண்பாகு பெயர்

Tamil Grammar Question 8 Detailed Solution

Download Solution PDF
சரியான பதில்: பண்பாகு பெயர் 
Key Points
  • விருந்தொரால் என்ற சொல் விருந்து என்பதை குறிக்காமல் விருந்தை நீக்குதல் என்று ஆகி வருவதால் இது பண்பாகு பெயர் ஆகும்.
  • இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் 

          வன்மை மடவார்ப் பொறை

  • சொற்பொருள்:
    • இன்மை = இல்லாமை, வறுமை, ஏழ்மை
    • ஒரால் = நீங்குகை
    • வன்மை = வலிமை, கடினம்
    • மடவார் = மூடர், அறிவில்லாதார்
    • பொறை = பொறுமை
  • பொருள்:
    • இல்லாமையிலும் இல்லாமை விருந்தினரை உபசரிக்கத் தவிர்வது. வல்லமையிலும் வல்லமை அறிவில்லாதவர்கள் செய்துவிட்ட குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுதல்.
Additional Information
  • பண்பு பெயர்:
    • ஒரு பொருளின் பண்பை குறிக்கும் பெயர் சொல் பண்பு பெயர் ஆகும்.
    • எ. கா.: நீளம்
  • வினையாலணையும் பெயர்:
    • வினையை குறிக்காமல் அந்த வினை செய்தவரை குறிக்கும் சொல் வினையாலணையும் பெயர் ஆகும்.
    • எ. கா.: வந்தவர்
  • வியங்கோள் வினைமுற்று:
    • வேண்டல் விதித்தல் வாழ்த்துகள் வைதல் முதலிய பொருள்களில் மூவிடங்களிலும் ஐம்பால்களிலும் வரும் வினைமுற்று வியங்கோல் வினைமுற்று ஆகும்.
    • எ. கா.: வாழ்க

தவறான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. மாம் பிஞ்சு - மாவடு 
  2. இளந் தேங்காய் - வழுக்கை 
  3. வாழைப் பிஞ்சு -வாழைக்கச்சல்  
  4. முருங்கைப் பிஞ்சு - முருங்கை மொட்டு 

Answer (Detailed Solution Below)

Option 4 : முருங்கைப் பிஞ்சு - முருங்கை மொட்டு 

Tamil Grammar Question 9 Detailed Solution

Download Solution PDF
சரியான பதில்: முருங்கைப் பிஞ்சு - முருங்கை மொட்டு
Key Points
  • மாம் பிஞ்சு என்பதன் மரபு சொல் மாவடு.
  • இளந் தேங்காய் என்பதன் மரபு சொல் வழுக்கை.
  • வாழைப் பிஞ்சு என்பதன் மரபு சொல் வாழைகச்சல்.
  • முருங்கைப் பிஞ்சு என்பதன் மரபு சொல் முருங்கைப்பிஞ்சு என்பதே ஆகும்.
 Additional Information
  • தாவரங்களின் இளமை மரபு பெயர்கள்:
    • அவரைப்பிஞ்சு
    • கத்தரிப்பிஞ்சு
    • வெள்ளரிப்பிஞ்சு
    • கொய்யாப்பிஞ்சு
    • பலா மூசு
    • கமுகங்கூந்தல்
    • பனையோலை
    • தாழைமடல்
    • நெற்றாள்
    • சோளத்தட்டு
    • வேப்பந்தழை

பெறு - இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடுக:

  1. பெற்றான் 
  2. பெற்றவன் 
  3. பெற்று 
  4. பெற்றவர் 

Answer (Detailed Solution Below)

Option 1 : பெற்றான் 

Tamil Grammar Question 10 Detailed Solution

Download Solution PDF
சரியான பதில்: பெற்றான்
Key Points
  • பெறு என்பது பெற்றான் என்பதன் வினைமுற்று ஆகும். 
  • பெற்றான் என்பது வினை எச்சம் ஆகும்.
  • வினைமுற்று: 
    • ஒரு செயல் முடிந்ததை குறிக்கும் சொல் வினைமுற்று எனப்படும்.
    • இது திணை, பால், எண், இடம், காலம் காட்டும் பயனிலையாக வரும்.
    • வினைமுற்று ஆறு வகைப்படும். அவை:
      • தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, உடன்பாடு வினைமுற்று, எதிர்மறை வினைமுற்று, ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று.
Additional Information
  •  பெற்றவன்,பெற்றவர் என்பது பெயரெச்சம் ஆகும்.

பகுபதத்தில் குறைந்தளவு/கட்டாயமாக இருக்க வேண்டிய உறுப்புகள்?

  1. பகுதி, சந்தி
  2. இடைநிலை, சாரியை
  3. பகுதி, விகுதி 
  4. விகுதி, சாரியை

Answer (Detailed Solution Below)

Option 3 : பகுதி, விகுதி 

Tamil Grammar Question 11 Detailed Solution

Download Solution PDF
சரியான பதில் பகுதி, விகுதி
Key Points
  • பகுபதத்தில் குறைந்தளவு/கட்டாயமாக இருக்க வேண்டிய உறுப்புகள் பகுதி, விகுதி
Additional Information
  •  பகுபதம்:
    • மேலும் பிரித்தால் பொருள் தரக் கூடிய சொல் பகுபதம் எனப்படும்
    • பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புகள் ஆகும்.
  • பகாப்பதம்:
    • மேலும் பொருள்தரக்கூடிய சொற்களாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.

அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக:

  1. மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம், மனத்துயர்
  2. மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு
  3. முந்நீர், மீமிசை, மனத்துயர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம்
  4. மனத்துயர், மேடு பள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு

Answer (Detailed Solution Below)

Option 2 : மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு

Tamil Grammar Question 12 Detailed Solution

Download Solution PDF
சரியான பதில்: மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு 
Key Points
  • மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு என்பதே சரியான அகரவரிசைப்படி அமைந்துள்ளது. 
Additional Information
  • மீமிசை என்றால் மலை உச்சி, மேலே என்று பொருள்.
  • முந்நீர் என்பதன் பொருள் கடல் ஆகும்.

‘வரைந்த ஓவியம்’ எவ்வகைத் தொடர் ?

கூற்று 1 : வினையெச்சத் தொடர்

கூற்று 2 : பெயரெச்சத் தொடர்

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
  3. கூற்று 1,2 சரி
  4. அனைத்தும் தவறு

Answer (Detailed Solution Below)

Option 2 : கூற்று 2 சரி, கூற்று 1 தவறு

Tamil Grammar Question 13 Detailed Solution

Download Solution PDF

சரியான பதில்: கூற்று 2 சரி, கூற்று 1 தவறு

Key Points

  • வரைந்த ஓவியம் என்பது பெயரெச்சத் தொடர் ஆகும்.
  • வரைந்த ஓவியம் - இதில் ‘வரைந்த’ என்னும் எச்சவினை ‘ஓவியம்’ என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது பெயரெச்சத்தொடர் ஆகும்.

Additional Informationவினையெச்சத் தொடர்:

  • வினையெச்சச் சொல் வினைமுற்றுச் சொல் கொண்டு முடிந்து இடையில்  எச்சொல்லும் மறையாமல் வருவது வினையெச்சத் தொடர் ஆகும்.
  • (எ. கா) தேடிப் பார்த்தான் - இதில் ‘தேடி’ என்னும் வினையெச்ச சொல் ‘பார்த்தான்’ என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்துள்ளது.
வினைமுற்றுத் தொடர்:
  • ஒரு வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்ந்து வருவது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
  • (எ. கா) சென்றனர் வீரர் - இதில் ‘சென்றனர்’ என்னும் வினைமுற்று ‘வீரர்’ என்னும் பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினைமுற்றுத் தொடர் ஆகும்.

பிரித்தெழுதுக:
நாத்தொலைவில்லை 

  1. நா + தொலைவில்லை 
  2. நாத்தொலைவு + இல்லை 
  3. நா + தொலை + இல்லை 
  4. நா + தொலைவு + இல்லை 

Answer (Detailed Solution Below)

Option 4 : நா + தொலைவு + இல்லை 

Tamil Grammar Question 14 Detailed Solution

Download Solution PDF
சரியான பதில்: நா + தொலைவு + இல்லை
Key Points
  • நாத்தொலைவில்லை என்பதை நா + தொலைவு + இல்லை என பிரிக்கலாம். 
Additional Information
  • முந்நூறு = மூன்று + நூறு
  • பேராசிரியர் = பெருமை + ஆசிரியர்
  • நூற்றாண்டு = நூறு + ஆண்டு
  • செந்தமிழ் = செம்மை + தமிழ்

செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது

  1. முரண்
  2. இயைபு
  3. மோனை
  4. எதுகை

Answer (Detailed Solution Below)

Option 4 : எதுகை

Tamil Grammar Question 15 Detailed Solution

Download Solution PDF

சரியான பதில் எதுகை

Key Points

  • எதுகை: ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ >இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
  • மோனை: ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். 
  • இயைபு: ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு எனப்படும்.
  • எ. கா. முகிலே பொழிலே
  • முரண்: அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுப்பது முரண் தொடையாகும்.
  • எ.கா. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Get Free Access Now
Hot Links: teen patti master new version teen patti classic teen patti gold download